இந்தியா, ஏப்ரல் 29 -- கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதை முன்னிட்டு நடிகர் அஜித் குமாருக்கு மத்திய அரசு நேற்று நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதினை நேற்று வழங்கியது. இதையடுத்து, அஜித் குமார் இன்று இந்தியா டுடே பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.

மேலும் படிக்க| மிடுக்கான நடை.. மனமார்ந்த புன்னகை.. பத்ம பூஷண் விருதினை கைகளில் ஏந்தினார் அஜித் குமார்..

அப்போது, தல, சூப்பர் ஸ்டார் பட்டங்களை அஜித் விரும்பாதது தான் அஜித்தின் இந்த உயர்வுக்கு காரணம் என்ற பேச்சு அடிபடுகிறதே அது உண்மையா என நிருபர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அஜித் குமார் நான் எப்போதும் பட்டங்களை விரும்புவதில்லை. என் பேருக்கு முன்னாள் எதையும் சேர்த்துக் கொள்ளவும் நான் விரும்புவதில்லை. என்னை அஜித், அஜித் குமார் அல்லது ஏகே என கூப்பிடுவதையே நான் எப்போதும் ...