இந்தியா, மே 16 -- சென்னையைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருக்கின்றனர். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆகாஷ், கடந்த ஆறு மாதங்களில் சுமார் 450 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று முக்கிய திரைப்படங்களைத் தயாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பெருந்தொகை முதலீட்டின் மூலாதாரம் குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க:- கிழித்து போடப்பட்ட வாட்சப் சாட்! டாஸ்மாக் இயக்குநர் விசாகனை அழைத்து சென்ற ED

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஆகாஷ் பாஸ்கரனின் திருமண விழாவில், திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வு, அப்போது வரை பெரிதாக அறியப்படாத ஆகாஷ் ஒரு தயாரிப்பாளர் என...