இந்தியா, மே 19 -- கோடை காலத்தில் மழை வெளுத்து வாங்குவது ஏன்? என்பது குறித்து சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விளக்கம் அளித்து உள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களான மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், தியாகராய நகர், மயிலாப்பூர், அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி, திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவாகியுள...