இந்தியா, ஏப்ரல் 3 -- சென்னையில் இன்று காலை லேசான மழை பெய்ததால் சென்னைவாசிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து சற்று இளைப்பாறினர். தமிழ்நாட்டின் ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் (ஆர்.எம்.சி) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஓரிரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, வரக்கூடிய 7ஆம் தேதி வரை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வங்...