இந்தியா, ஏப்ரல் 25 -- பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீரா'பாடல் சிவா ஸ்துதி பாடலைப்போலவே உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், அது அவ்வாறு தான் உள்ளது என்று கூறி, ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காப்புரிமை விவகாரத்தில் ரூ.2 கோடியை டெல்லி உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், ''வீரா ராஜ வீரா'' பாடல் தொடர்பாக, பத்மஸ்ரீ விருது பெற்ற ஃபயாஸ் வாசிபுதீன் தாகர் தொடர்ந்த வழக்கில், இந்த பாடல் தனது தந்தை நசீர் ஃபயாஸ் வாசிபுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிருதீன் தாகர் ஆகியோரால் இயற்றப்பட்ட 'சிவ ஸ்துதி' பாடலில் இருந்து நகலெடுக்கப்பட்டது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

வெவ்வேறு பாடல் வரிகள் இருந்தபோதிலும், பாடலின் இசை அமைப்பு, தாளம் ஆகியவை அச...