இந்தியா, ஜூன் 21 -- ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பும் கடவுள்களை வழிபட உரிமை உண்டு என மதுரை முருகன் மாநாடு குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கீழடி அகழ்வு ஆய்வு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். "நேற்றைய தினமே, அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. மாஃபா பாண்டியராஜன், கீழடி ஆய்வு குறித்து விரிவாக விளக்கமளித்துவிட்டார். மாண்புமிகு அம்மா ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவரது மறைவுக்குப் பின் அதிமுக அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பணிகள் குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர...