சென்னை, ஏப்ரல் 30 -- அதிமுக பொதுச் செயலாளரும். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி "மே தின" வாழ்த்துச் செய்தியை அறிக்கையாக பகிர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

''உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு உணர்த்தும் வண்ணம், உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'மே' தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் படிக்க | கொல்கத்தா தீ விபத்து: 3 தமிழர்கள் உள்ளிட்ட 14 பேர் பலி.. எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைக்காகவும், நலனிற்காகவும், பல நூற்றாண்டுகளாகப் போராடி அடிமை விலங்கினை உடைத்தெறிந்து, தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த திருநாள் 'மே' த...