இந்தியா, ஜூன் 2 -- மதயானைக் கூட்டம், இராவணக் கோட்டம் போன்ற படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலானது அவரது சொந்த ஊரான மதுரை பரமகுடியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு வெற்றிமாறன், மாரிசெல்வராஜ், சாந்தனு, கலையரசன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

அவரது இறப்பு குறித்து பேசிய வெற்றிமாறன், 'நான் திரைத்துறையில் உதவி இயக்குநராக வேலைக்கு சேர்ந்த பொழுது என்னுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய முதல் நபர் விக்ரம்தான். சினிமாவில் எனக்கு கிடைத்த முதல் நட்பு விக்ரம் உடையது தான்.

மேலும் படிக்க | தமிழ் திரையுலகிற்கு மீண்டும் ஓர் பேரதிர்ச்சி.. பேருந்து பயணத்திலேயே பறிபோன இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் உயிர்!

நாங்கள் பாலுமகேந்திரா சாருடன் இணைந்து கதை நேரம், ஜூலி கணபதி உள்ளிட்டவற்றில் இணைந்து பணியாற்...