இந்தியா, மே 22 -- பாஜகவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் அதிமுகவையோ அல்லது அதன் பொதுச்செயலாளரையோ விமர்சிக்கும் வகையில் கருத்துகள் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.

இதற்கு இணங்காதவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார். இந்த அறிவிப்பு, பாஜக-அதிமுக கூட்டணியை வலுப்படுத்துவதற்காகவும், திமுகவிற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவதற்காகவும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:- துணை வேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் சட்டத்திற்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி!

நேற்று மாலை சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற ஊடகப் பிரிவு கூட்டத்தில், நயினார் நாகேந்திரன் இந்த எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில்...