இந்தியா, மே 21 -- வரும் மே 23ஆம் தேதி பெரிய விஷயம் ஒன்றை சொல்லப்போவதாக நடிகர் ரவிமோகன் அறிவித்திருக்கிறார்.

ரவிமோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் சமரச பேச்சு வார்த்தைகள் தொடர்பான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து ஆர்த்தி தாக்கல் செய்த மனுவில் ரவி மோகன் மாதத்திற்கு 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும்; குழந்தைகளையும் ரவியே பாராமரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதேபோல ரவி மோகன் தரப்பில் இருந்து ஆர்த்தி சேர்ந்து வாழ வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டும் மனுக்களுக்கும் ரவிமோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த வழக...