இந்தியா, ஏப்ரல் 26 -- ஒரு படம் ரூ.500 கோடி கலெக்‌ஷன் என்பது எல்லாம் பொய் என்றும், ஆடியன்ஸுக்கு படம் பிடித்து இருந்தால் போதும் என்றும் நடிகர் மற்றும் இயக்குநர் சுந்தர் சி பேட்டியளித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி ஏப்ரல் 25ஆம் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் சொன்ன பதில்களின் தொகுப்பு:-

மேலும் படிக்க: 'கே.பாலச்சந்தரின் உதவி இயக்குநர் முதல் நடிகர் வரை': சமுத்திரக்கனி கடந்து வந்த திரைப்பாதை!

''சுந்தர். சி படங்கள் அப்படினாலே ஒரு பெரிய நட்சத்திர பட்டாளம் இருக்குது. அது உங்களுடைய கதை போக்குக்கும் உங்களுடைய ஸ்டைல் ஆஃப் சினிமாக்கும் சப்போர்ட்டா இருக்கிறதா? இல்ல உங்களுக்கு அப்படி ஒரு படம் பண்றதுதான் பிடிச்சிருக்கா?'

ஒவ்வொரு படம் கதை தொடர்பாக உட்காரும்போதும் டிஸ்கஷனில், இந்த படத்துல கூட்டம் இல்லாமல்...