Tenkasi,chennai, ஏப்ரல் 9 -- தென்காசியில் அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக மருத்துவர்களிடம் கட்டாய பணம் வசூல் செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தென்காசியைச் சேர்ந்த தொகுதி மருத்துவ அதிகாரியாக இருக்கும் மருத்துவர் பேசிய ஆடியோ வைரல் ஆகியிருக்கிறது. அதில், ''இப்படியே போனால் என்ன சார் செய்யுறது. ஸ்ட்ரெஸ்ஸோடு வேலை பார்க்கிற மாதிரி இருக்கு. ஏன் பி.எம்.ஓ (BMO - Block Medical Officer)ஆனோம்னு இருக்கு சார்.

அமைச்சர் வருவதற்காக, கட்சி ரீதியாக நடத்தும் விழாவை கட்சி ரீதியாக நடத்திட்டுப் போயிடணும். அரசு சார்பில் ஏன் சார் மேடை போடணும். ஒவ்வொரு PHC-க்கும் (Primary Health Centre) முன்னாடி ரூ.5ஆயிரம் இருந்தது. இப்போது ரூ.10 ஆயிரம் கலெக்ட் செய்ய சொல்றாங்க.

புது மெடிக்கல் ஆபிசர்கிட்ட போய் என்ன சார் கலெக்ட் செய்ய முடி...