இந்தியா, டிசம்பர் 6 -- வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகினாலும் விலகினார்; பின்னணி நடந்தது என்ன, என்று பலரும் புலன்விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் எப்போதும் சர்சைக்கு பெயர் போன பயில்வான் ரங்கநாதன், வணங்கான் படத்தின் பிரச்னைக்கான காரணத்தை அவர் பங்கிற்கு அவர் வெளியிட்டுள்ளார். இதோ அவருடைய விசாரணையில் தெரியவந்ததாக அவர் பேசியவை:

''பாலா, அவரது சுய வாழ்வில், அவரது மனைவியை பிரிந்து மிகவும் சோகத்தில் இருந்தார். இதை அறிந்த சூர்யாவும், அவரது அப்பா சிவக்குமாரும், பாலாவை அழைத்து அவரை தேற்ற நினைத்தார்கள்.

அவரை வைத்து நன்றி கடனாக ஒரு படத்தை தயாரித்து நடிக்க முடிவு செய்தார் சூர்யா. அப்படி தான் வணங்கான் படப்பிடிப்பு தொடங்கியது. பிரம்மாண்ட செட் போட்டு, படத்தை தொடங்கினார்கள்.

படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமானார். எப்போ...