இந்தியா, மே 15 -- தான் தன் மனைவியாலும் சக குடும்பத்தினராலும் முன்னதாக முதுகில் குத்தப்பட்டதாகவும் தற்போது மார்பில் குத்தப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் நடிகர் ரவி மோகன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இந்த விளையாட்டில் என் பிள்ளைகளை ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், " எனது முன்னாள் மனைவியும் அவரது தீய வழிகாட்டிகளும் உண்மையை திரித்து பேசுகின்றனர். குழந்தைகளின் பராமரிப்பைப் பெறுவதற்காக மட்டுமே பொது வெளியில் கருத்துகளை் பகிர்வதாகவும், எனது மனைவியையும் என் குழந்தைகளையும் நிதி ரீதியாக துன்புறுத்தியதாக பொய்யான கதைகளை உருவாக்குவதைப் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் கடினமாக சம்பாதித்த சொத்துக்களில் பாதியை விட்ட...