இந்தியா, ஜூலை 5 -- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தொடங்கவுள்ள தனது மாநிலளாவிய சுற்றுப்பயணம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார். இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கம், திமுக ஆட்சியின் குறைபாடுகளை மக்களிடையே அம்பலப்படுத்தி, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வைப்பது என அவர் தெரிவித்தார்.

எடப்பாடி, தனது சுற்றுப்பயணத்தை "எழுச்சி பயணம்" எனக் குறிப்பிட்டு, இது தேர்தல் பிரச்சாரம் மட்டுமல்ல, மக்களிடையே நம்பிக்கை விதைப்பதற்கான முயற்சி என விளக்கினார். "தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்கள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்றவை தினந்தோறும் நடக்கின்றன. இந்தக் கொடுமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி, மாற்...