இந்தியா, ஜூன் 9 -- அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தில் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினா எழுப்பி உள்ளார்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் செயல்பட்டு வரும் அரசு சேவை மையத்தில் தங்கி படித்து வந்த 8-ஆம் வகுப்பு மாணவி அங்கு பணியாற்றி வரும் காவலாளியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அரசு இல்லங்களில் கூட மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அவல நிலையில் தான் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்பது வெட்கக்கேடு ஆகும்.

தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் தங்கி பயின்று வரும் மாணவிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வீடுகளுக்கு சென்றுள்ளனர். திருக்கோவிலூரைச் சேர்ந்த ஏழை மாணவி ஒர...