இந்தியா, மே 2 -- இயக்குநர் சுந்தரபாண்டி இயக்கிய 'வைகை' திரைப்படம் மூலம், நடிகையாக அறிமுகமானவர், நடிகை சுவாசிகா. இவரது நிஜப்பெயர், பூஜா விஜய்.

ஆட்டுப்புரத்து விஜயகுமார் மற்றும் கிரிஜா தம்பதியினருக்கு, கேரளாவின் பெரும்பாவூரில் மகளாகப் பிறந்தவர். பி.ஏ. மலையாள இலக்கியம் படித்த சுவாசிகா, பரதநாட்டியமும் பயின்றவர். 'வைகை' திரைப்படத்துக்குப் பின், ராசு மதுரவன் இயக்கிய 'கோரிப்பாளையம்' திரைப்படத்திலும் நடித்தவர். அதன்பின், மைதானம், சாட்டை, கண்டதும் காணாததும், சோக்காலி, அப்புச்சி கிராமம் ஆகியப் படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து கவனம் பெற்றார். அதன்பின், தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் மலையாளப் படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார்.

அதன்படி, வாசந்தி, கேஸு ஈ வீடின்ட நாதன், ஆராட்டு, சிபிஐ 5, பத்தாம் வளவு, மான்ஸ்டர், குமாரி, ஆட...