இந்தியா, ஜூன் 11 -- பொதுமக்களிடமிருந்து வாங்கும் மனுக்களில் கூட விளம்பரம் தேடும் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம் என எதிர்க்கட்சித்தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி அளித்த அறிக்கையில், 'தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவதும், அம்மனுக்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிறைவேற்றுவதும் நடைமுறை. எங்களின் இதய தெய்வங்களான புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர், மாவட்டங்களில் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும்போது, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை சென்னைக்குக் கொண்டுவந்து முதலமைச்சரின் தனிப் பிரிவில் அம்மனுக்கள் பிரிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும்.

1991-96 ஆட்...