இந்தியா, ஜூன் 13 -- அகமதாபாத் விமான விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைக்கும் போது மனம் பதறுவதாகவும், அவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் தவெக கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் கேட்டுக் கொண்டார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று நிகழ்ந்த விமான விபத்து குறித்து நடிகர் விஜய் ஆழ்ந்த சோகத்துடன் பேசினார். ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறி 241 பேர் உயிரிழந்த சம்பவத்தின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பார்த்து தனது மனம் பதறுவதாக உருக்கமாகக் கூறினார். இந்த கோர விபத்து குறித்து அவர் பேசிய வீடியோ பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

விஜய், உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார். "அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை," என்...