இந்தியா, மே 18 -- தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

வானிலை மையத்தின் அறிக்கையின்படி, பிற்பகல் 1:00 மணி வரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி உடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் தாக்கமாக, இப்பகுதிகளில் சாலைகள் நழுவுதல், சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படலாம்.

மேலும் படிக்க:- 'கண்ட இடத்தில் கடித்து வைத்த தெய்வச்செயல்! உடலையும் நாசம் செய்தார்!' திமுக நிர்வாகி மீது மாணவி பகீர் புகார்

அதேபோல், பிற்பகல் 1:00 மணி வரை திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவ...