இந்தியா, மே 13 -- ஆறு வருடங்களுக்கு முன் மக்களின் மனதில் துயரம் பாய்ச்சிய அழுகுரலை மறக்க முடியுமா.. ப்ளீஸ் என்னை அடிக்காதீங்க அண்ணா.. தன்னை வேட்டையாடிய கூட்டத்திடம் மண்டியிட்டு கெஞ்சிய அழுகுரல் இன்னும் எதிரொலிக்கிறது. இந்த வழக்கின் நீண்ட பயணத்தின் முடிவாய் நீதிமன்றம் இன்று உத்தரவு வழங்க இருப்பதை இந்தியாவே உற்று நோக்குகிறது.

கடந்த 2019 பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி பொள்ளாச்சி நகர காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை புகார் செய்தார். அந்த புகார் தமிழக அரசியலில் அதிர்வுகளையும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. 2019 பிப்ரவரி 24ல் சபரி ராஜன் உள்ளிட்ட நான்கு பேரை உள்ளடக்கி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்க | மதுரை சித்திரை திருவிழாவில் குவிந்த குப்பைகள்! எத்தனை டன் தெரியுமா? சுழற்ச...