இந்தியா, மே 13 -- கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியை சேர்ந்த சில பெண்கள் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் சிலர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கினை விசாரிக்க திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்தன. அதில் இந்த குற்ற செயலின் பின்னணியில் பலர் இருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர்களால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும் இதில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் அதிமுக நிர்வாகியும் ஒருவர் எனவும் தெரியவந்தது. இந்த பிரச்சனை தீவிரமடைந்ததை தொடர்ந்து அன்றைய ஆளும் அரசு அதிமுக விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

ஆறு ஆண்டு கால நீண்ட விசாரணைக்கு பின்னர் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என இன்று (13/05/2025) தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும் அனைவருக்கும...