இந்தியா, மார்ச் 20 -- பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகராக இருந்தபோது, அவரிடம் தெலுங்கில் பேசினாலும் கண்டுகொள்ள மாட்டார் என அமைச்சர் கே.என்.நேரு பேசியது பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். கடந்த மார்ச் 17ஆம் தேதி தொடங்கிய 2025 - 26ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை மீதான 3 நாள் விவாதம் (மார்ச் 19) நேற்றுடன் நிறைவடைந்து. இன்றைய தினம் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. நாளை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை உள்ளது. வரும் மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை துறைரீதியான...