பொள்ளாச்சி, மே 14 -- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முதன் முதலில் புகார் அளித்த பெண்ணின், வழக்கறிஞரான கோபாலகிருஷ்ணன், அந்த வழக்கு தொடர்பான தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது:

''பொள்ளாச்சி வழக்கையை இரு வழக்காக பார்க்க வேண்டும். ஒன்று பாலியல் வழக்கு, மற்றொன்று பாலியல் வழக்கைத் தொடர்ந்து நடந்த அடிதடி வழக்கு. அடிதடி வழக்கில் ஜாமினில் வந்தது தான், மீடியாவின் இத்தனை பேச்சுகளுக்கு காரணம். பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளியே வந்ததைப் போல, ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். சம்மந்தப்பட்ட பெண் புகார் கொடுத்ததால், அந்த பெண்ணின் அண்ணனை இவர்கள் தாக்கினார்கள். அது இரண்டாவது எப்.ஐ.ஆர்., ஆகிறது. அந்த வழக்கில் தான், அவர்கள் கைதாகி ஃபெயிலில் வந்தார்கள். ஆனால், பாலியல் வழக்கு நடந்து கொண்டிருந்தது. அ...