திண்டிவனம்,விழுப்புரம், ஏப்ரல் 23 -- பெண்கள் குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி திண்டிவனத்தில் அதிமுக மகளிர் அணியினர் பொன் நிறத்தில் விக் அணிந்து வந்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | பஹல்காம் தாக்குதல்: 'காயமடைந்த தமிழர்களுக்கு உரிய சிகிச்சை' சட்டமன்றத்தில் இபிஎஸ் பேச்சு!

விலைமாது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டிவனத்தில் அதிமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொன்முடி என்பதை குறிக்கும் வகையில் பெண்கள் தலைலையில் தங்க நிறத்தில் விக் அணிந்து வந்து பொன்முடிக்கு எதிராகவும், பெண்கள் குறித்தி...