இந்தியா, மே 3 -- டெல்லியில் நடைபெற்ற NCERT கூட்டத்தில் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை என்பது இந்துத்துவா கொள்கையாக உள்ளது என குற்றம்சாட்டியது.

பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம் மூலம் சமஸ்கிருதம், இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இந்தக் கூட்டத்தை NCERT செயலாளர் கூட்டினார்.

இந்தக் கூட்டம், அமைப்பின் தோற்றம் மற்றும் தொலைநோக்குப் பார்வை, NEP 2020 உடன் இணைந்த சமீபத்திய முயற்சிகள், புதிய பாடத்திட்டம் மற்றும் கற்றல்-கற்பித்தல் பொருட்களின் மேம்பாடு, அடிப்படை நிலை மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்புகள் மற்றும் ஜாதுய் பிதாரா மற்றும் இ-ஜாதுய் பிதாரா போன்ற புதுமையான வளங்கள் ஆகியவற்றை எடுத்துக்காட்டியது.

மேலும் ப...