இந்தியா, மார்ச் 16 -- தமிழ்மொழியில் மண்சார்ந்த கிராமியப் படங்கள் என்பவை உயிரோட்டம் மிக்கவை. தனித்துவமானவை. வெகுநாட்களாக செட்களுக்குள் முடங்கிக் கிடந்த, நாடக பாணியில் இருந்த தமிழ் சினிமாவை, தனது முதல் படமான 16 வயதினிலே படம் மூலம் உடைத்து, அதனை கிராமங்களுக்கு அழைத்துச்சென்றவர், இயக்குநர் பாரதி ராஜா. இயக்குநர் இமயம் எனவும் புகழப்படுகிறார். இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பல்வேறு திரைப்படங்களை இயக்கிய, இயக்குநர் பாரதி ராஜா, தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் பல எளிய, திரைப்பின்புலம் இல்லாத கலைஞர்களுக்கு வாய்ப்பளித்தவர். அதேபோல், இவர் ஆங்கிலத்தில் ஆர் வரிசையில் பெயர் வரும் வகையில் அறிமுகப்படுத்திய ஹீரோயின்களும் ஏராளம். அப்படி, இயக்குநர் பாரதி ராஜாவால் தமிழ்த்திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்ட கதாநாயகிகளான ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ர...