இந்தியா, மே 9 -- பாகிஸ்தான் தனது செயல்களுக்கு பொறுப்பேற்பதற்குப் பதிலாக, இந்தியா குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது என வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

செய்தியாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அவர் கூறியதாவது:

பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாகிப் குருத்வாராவில் இந்திய ஆயுதப் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதாக பாகிஸ்தான் கூறுவது அப்பட்டமான பொய். பாகிஸ்தான், வகுப்புவாத மோதலை உருவாக்கும் நோக்கத்துடன், இந்த சூழ்நிலைக்கு வகுப்புவாத சாயலைக் கொடுக்க தீவிரமாக முயற்சிக்கிறது. இதுபோன்ற செயல்களை அவர்கள் செய்வதை வரலாற்றின் மூலம் அறியலாம். பாகிஸ்தான் தனது செயல்களுக்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக, அபத்தமான மற்றும் மூர்க்கத்தனமான கூற்றுக்களை நமது ஆயுதப் படைகளுக்கு எதிராக முன்வைத்து வருகிறது.

மேலும் படிக்க | இந்தியா-வங்கதேச எல்லையில...