இந்தியா, மே 19 -- பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் உளவுத்துறைக்காக, உளவு பார்த்ததாக மொராதாபாத் நகரைச் சேர்ந்த ஒருவரை உத்தரப்பிரதேச சிறப்புப் பணிக்குழு கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர் உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தாண்டாவைச் சேர்ந்தவர்.

ஷாஜாத் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், எல்லை தாண்டிய கடத்தல் மற்றும் ஐஎஸ்ஐயின் முகவராக உளவு பார்த்ததாக வந்த தகவல்களை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களை ஷாஜாத், பாகிஸ்தானில் உள்ள தனது நிர்வாகிகளுக்கு அனுப்பி வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் பலமுறை பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளார் என்று உத்தரப்பிரதேச சிறப்புப் பணிக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 17 பேர் உடல் கருகி ...