இந்தியா, ஜூன் 6 -- மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

மதுரையில் ஜூன் 10 முதல் 22 வரை முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை காவல்துறையை நடுநிலையாக செயல்பட அறிவுறுத்தியுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து காலை மற்றும் மாலை வழிபாடு நடத்த அனுமதி கோரிய இந்த வழக்கில், நீதிமன்றம் இது ஜனநாயக நாடு என்பதை வலியுறுத்தி, காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், அம்மா திடலில் ஜூன் 10 முதல் 22 வரை முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து காலை மற்றும் மாலை இரு வேளைகளில் இரண்டு மணி நேரம் பூஜை நடத்தி, பிர...