இந்தியா, மே 19 -- இந்தியாவுடனான வங்கதேசத்தின் வர்த்தகத்தை கணிசமாகப் பாதிக்கக்கூடிய ஒரு நடவடிக்கையாக, வங்கதேசத்தில் இருந்து தரைவழிப்போக்குவரத்து மூலம் பல்வேறு நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு புதிய துறைமுக கட்டுப்பாடுகளை விதித்தது.

மேலும், கொல்கத்தா மற்றும் மும்பையின் நவா ஷேவா துறைமுகங்கள் வழியாக மட்டுமே வங்கதேசத்திலிருந்து வரும் ஆயத்த ஆடைகளை அனுமதிக்கவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இருப்பினும், அத்தகைய துறைமுக கட்டுப்பாடு இந்தியா வழியாக எடுத்துச் செல்லப்படும் வங்கதேசப் பொருட்களுக்குப் பொருந்தாது. மாறாக நேபாளம் மற்றும் பூட்டானுக்குச் செல்லும் பொருட்களுக்குப் பொருந்தும். இந்தப் புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

இதுதொடர்பாக இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வங்கதேசத்திலிருந்து அனைத்து...