இந்தியா, ஜூன் 11 -- டி.என்.ஏ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் மாரிசெல்வராஜ் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும் போது, 'நெல்சன் மிகவும் கனமான கதைகளை தேர்ந்தெடுத்து செய்கிறார். அவரின் படங்களை பார்க்கும் பொழுது, இவருக்கு என்ன வயது இருக்கும் என்று நினைத்திருக்கிறேன். அவரின் ஒரு நாள் கூத்து படத்தை பார்க்கும் பொழுது, அவர் அந்தப்படத்தை ஆரம்பித்த விதம் மிக மிக புரிதலோடு இருந்தது.

அதை அவர் இப்போதைய ஜெனரேஷன் மக்கள் பார்ப்பார்களா என்பது குறித்தெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அவருக்கு இப்படியான கதையை இப்படி சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. அதன்படி அவர் செய்தார். எங்களது ஜெனரேஷனில் அவர் தனியாக இருக்கிறார். அவரின் மான்ஸ்டர் திரைப்படத்தில் கூட, சென்சிபிளான காமெடியைத்தான் முன் வைத்திரு...