இந்தியா, மே 4 -- 'பகுத்தறிவு பேசும் திமுகவுக்கு பகுத்தறிவே இல்லை' என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்து உள்ளார்.

கமலாலயத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "என்ன அழுத்தத்தில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கடந்த காலத்தில் திமுக ஆட்சியை கலைத்ததாகவும், அவசரநிலை காலத்தில் திமுக தலைவர்களை சிறையில் அடைத்ததாகவும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். "ராஜமன்னார் கமிட்டி அமைத்து மாநில சுயாட்சி பேசிய திமுக, இந்திரா காந்தியிடம் சரணடைந்தது. இப்போது காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருப்பது எந்த அழுத்தத்தால்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக-பாஜக கூட்டணியால் அழுத்தத்தில் இருப்பதாக ...