திருநெல்வேலி,நெல்லை, மார்ச் 18 -- நெல்லை டவுண் பகுதியை சார்ந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாஹீர் உசேன் பிஜிலி படுகொலை செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில் தொடர்புடையதாக நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த அக்பர் ஷா மற்றும் தச்சநல்லூர் பால் கட்டளை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | 'செங்கோட்டையனை பேச விடுங்க..' சபாநாயகரிடம் சீறிய எடப்பாடி பழனிசாமி.. ஒரே நாளில் மாறிய காட்சிகள்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியில் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் எஸ்.ஐ., ஜாஹீர் உசேன். நெல்லை டவுன் தடிவீரன் கோயில் தெருவில் வசித்து வருகிறார். ரம்ஜான் நோன்பு இருந்து வரும் அவர், இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள தர்காவுக்கு தொழுகை நடத்தச் சென்றார். தொழுகை முடித்து தெற்கு மவுண்ட் ர...