இந்தியா, மே 3 -- ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன் அப்படத்தினை விளம்பரப்படுத்த புரோமசன் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இத்தகைய புரோமசன் நிகழ்ச்சிகளில் அப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் பங்கேற்பார்கள். ஆனால் ஒருவர் பெரிய நடிகராக மாறியதும் அது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகின்றனர். உதாரணமாக தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா ஆரம்பத்தில் இருந்தே எந்த பட நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை. இது தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த வரிசையில் நடிகர் யோகி பாபுவும் தான் நடித்த பட நிகழ்ச்சிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் கடுமையாக திட்டி பேசியுள்ளார்.

மேலும் படிக்க | இரண்டாவது நாளில் சரிவைக் கண்ட சூர்யாவின் ரெட்ரோ! கை கொடுத்தாரா கார்த்திக் சுப்புராஜ்! 2 ஆவது நாள்...