இந்தியா, மே 30 -- "நீட் மட்டுமே உலகமல்ல, அதைத் தாண்டி இந்த உலகம் மிகப் பெரியது. பல துறைகளில் சாதிக்க வாய்ப்புகள் உள்ளன" என மாணவர்களுடன் நடந்த சந்திப்பில் தவெக தலைவர் விஜய் பேசினார்.

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகை வழக்கும் நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன் உரையாற்றினார். அவரது உரையில், கல்வி, ஜனநாயகம், மற்றும் சமூக மாற்றம் குறித்து முக்கியமான கருத்துகளை பகிர்ந்தார். மாணவர்களுக்கு அழுத்தமில்லாத கல்வி முறையையும், பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் ஆர்வத்தை மதிக்கும் அணுகுமுறையையும் வலியுறுத்தினார். மேலும், ஜனநாயக கடமையை முறையாக செய்ய வேண்டியதன் அவசிய...