இந்தியா, மே 20 -- நீட் தேர்வு அச்சத்தால், சேலம் அருகே நரசோதிப்பட்டியைச் சேர்ந்த மாணவர் கெளதம் உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலின், நீட் தொடர்பாக தான் சொன்ன பொய்க்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ''சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கௌதம், நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழந்திருக்கிறார்.

ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது திரு. மு....