Chennai, மே 3 -- எழுத்தாளர் கிரேஸி மோகனின் நாடகங்களின் தொகுப்பு, 25 புத்தகங்களாக சென்னையில் வெளியிடப்பட்டது. அதனை அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

அப்போது நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், கிரேஸி மோகனின் சகோதரர் மாது பாலாஜி உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ''அஜித் தன்னை 'தல'ன்னு கூப்பிடாதீங்க. ஏ.கே.ன்னு கூப்பிடுங்கன்னு சொன்னால், அடுத்த படத்தில் அவரது ரசிகர்கள் ரிலீஸின்போது 'தல'ன்னு தான் கூப்பிடுறாங்க. அதை மாத்தவே முடியாது. உலக நாயகன்னு கூப்பிடாதீங்கன்னு கமல்ஹாசன் சார் சொல்றார்.

நீங்க யார் சார் அதைச் சொல்றதுக்கு, நாங்க கூப்பிடுவோம். இது ஒரு தலைக்காதல் மாதிரி. நீங்கள் காதலிக்கவில்லை என்றால் பரவாயில்லை. நாங்கள் காதலிப்போம். நீங்க பத்மஸ்ரீ ப...