இந்தியா, மார்ச் 10 -- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. மக்களவை கேள்வி நேரத்தின்போது, திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். அதில் ''2000 கோடி என்பது பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டது. பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்திற்கு அந்த நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கவலை தெரிவித்திருக்கிறார். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. கல்விக்காக ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை தராமல் இருப்பது, சரியா? இது பழிவாங்கும் நடவடிக்கை. மாநில மாணவர்களை பாதிக்கிறது. கெ...