ராமேஸ்வரம்,புதுக்கோட்டை,ராமநாதபுரம்,கொழும்பு,சென்னை, ஏப்ரல் 2 -- திமுக அரசின் கச்சத்தீவு தொடர்பான தீர்மானம் குறித்து, பாஜக தலைவர் அண்ணாமலை, சில ஆதாரங்களுடன் கண்டனம் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக, தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவு இதோ:

''சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள், அதிகரித்து வரும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகள் என, தமிழகம் இதுவரை இல்லாத மோசமான இருண்ட காலத்தில் இருக்கும்போது, நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அவரது இன்றைய நாடகம், கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்.

கடந்த இருபது ஆண்டுகளில், இலங்கை அரசால், ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிப் ப...