இந்தியா, மே 2 -- குற்றம் தவிர் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. அப்போது இயக்குநர் கங்கை அமரன் பேசியது வைரல் ஆனது.

அப்போது பேசிய கங்கை அமரன், ''இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, குற்றம் தவிர் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு வந்தது மகிழ்ச்சி. ஸ்ரீகாந்த் தேவாவைப் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. ஒரே இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சம்பந்திகள். அவங்க வீடும் எங்க வீடும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டுருக்கு. தாலாட்டு பாடல் மனசைத் தொடுறமாதிரி இருந்தது.

நான் வந்தால் குறை சொல்லாமல் போறது கிடையாது. பத்திரிகையைப் பார்த்தேன். இசை ஸ்ரீகாந்த் தேவானு போடவில்லை. தயாரிப்பாளர் அறிவிப்பிலும் பி.ஆர்.ஓ அறிவிப்பிலும் இசை ஸ்ரீகாந்த் தேவா என்று போடவில்லை. ஏனென்றால், எங்கள் மரியாதையை நாங்கள் விட்டுத்தர மாட்டோம்' என்றார், கங்கை அமரன். ...