இந்தியா, மே 30 -- தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற பேச்சில் உறுதியாக உள்ளதாகவும், மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பின் ம.நீ.ம கட்சித்தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் அழைத்ததின் பேரில் சந்தித்ததாகவும், ராஜ சபாவில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தினார் என்றும், வேட்பாளர் தாக்கல் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறினார்.

மேலும், மக்களவையில் தான் தன்னுடைய குரல் முதல் முறையாக ஒலிக்க இருந்தாலும், தமிழ்நாட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து தான் வருகிறேன் என கூறினார்.

தமிழில் இருந்து தா...