இந்தியா, ஜூன் 24 -- போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி கோரிக்கை வைத்திருக்கிறார்.

அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர் இந்த கோரிக்கையை வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர் கூறியதாக சொல்லப்படும் தகவலில், 'போதைப்பொருள் பயன்படுத்தி நான் தவறு செய்து விட்டேன். மகனுக்கு உடல்நிலை சரியில்லை. அவனை நான் கவனித்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் பிரச்சினை இருக்கிறது.

வெளிநாடு செல்ல மாட்டேன். வழக்கு விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்புக்கொடுப்பேன்' என்று கூறியதாக தெரிகிறது.

மேலும் ஸ்ரீகாந்த், போதைப்பொருளை யாருக்கும் விற்பனை செய்யவில்லை என்றும் தான் மட்டுமே பயன்படுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனைக்கேட்ட நீதிபதி, ஜாமீன் வழங்க...