இந்தியா, மே 16 -- 'நான் சாப்பாட்டுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்குத்தான் தெரியும் என்று மதுரையில் மண்சோறு சாப்பிட்ட தனது ரசிகர்களை நடிகர் சூரி கண்டித்திருக்கிறார்.

இதுதொடர்பாக, மாமன் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருக்கும் சென்னை கமலா திரையரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சூரி தனது வருத்தங்களைத் தெரிவித்தார்.

அதில், ''மாமன் திரைப்படம் இன்னிக்கி காலையில் ரிலீஸ் ஆகியிருக்கு. உலகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. ரோஹிணி தியேட்டர் போயிருந்தேன். இரண்டு, மூணு அக்காக்கள் என் வாழ்க்கையில் நடந்த மாதிரி இருந்துச்சுன்னு சொன்னாங்க.

இதைத்தான் நாங்க முன்னாடியே சொன்னோம். அவங்க அவங்க குடும்பத்தைப் பார்க்கிற மாதிரி இருக்கும்ன்னு சொன்னோம். அது பயங்கரமாக கனெக்ட் ஆகியிருக்கு. ஃபர்ஸ்ட் ஆஃப்பில் ரொம்ப சிரிச்சவங்க, செகண்ட் ஆஃப்பில் ரொம்ப அழுகைய...