இந்தியா, மே 2 -- பிரதமர் நரேந்திர மோடி, மே 2ஆம் தேதியான இன்று அமராவதியில் ரூ.58,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவின் 'கனவுத் திட்டமான' அமராவதியை பசுமைத் தலைநகரமாக்கும் கட்டுமானப் பணிகளையும் பிரதமர் மோடி மீண்டும் தொடங்கி வைத்தார்.

அதாவது, பிரதமர் மோடி 94 திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அவற்றில் அமராவாதியின் நகர நிறுவனங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே மேம்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் ஆகியவையும் அடங்கும் என்று பிடிஐ அறிக்கை தெரிவிக்கிறது.

இந்நிகழ்வில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு வலுவான நடவடிக்கை எடுப்பதற்காக பிரதமர...