இந்தியா, பிப்ரவரி 26 -- நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பில் ஒரு இடம் கூட தமிழ்நாட்டிற்கு குறையாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.

மகா சிவராத்திரியையொட்டி ஈஷா யோக மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு கோயம்புத்தூர் வந்தடைந்தார். இன்று காலை கோவை, திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட அலுவலகங்களையும் அவர் திறந்து வைத்தார்.

பாரத பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நிர்மலா சீதாராமன் அவர்கள் மிக அற்புதமான பட்ஜெட்டை தந்து இருக்கிறார். விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பட்ஜெட் அமைந்து உள்ளது.

2024ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்று உள்ளார். ஒரிசாவில் பாஜக ஆட்சி அமைந்து உள்ளது. ஆ...