இந்தியா, மார்ச் 9 -- அமித்ஷா அவர்கள் குறையாது என்று சொன்னாலும், அதன் வழிமுறைகளை இன்னும் விளக்கவில்லை. அதன் வழிமுறைகளை சொன்னால்தான் அடுத்து எங்களின் நகர்வு பற்றி சொல்வோம் என திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக குரல் எழுப்பவும், 7 மாநில முதலமைச்சர்களை நேரில் சந்தித்து குரல் எழுப்பவும் எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, அமித்ஷா அவர்கள் குறையாது என்று சொன்னாலும், அதன் வழிமுறைகளை இன்னும் விளக்கவில்லை. அதன் வழிமுறைகளை சொன்னால்தான் அட...