இந்தியா, மே 15 -- நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமைப்பு ரீதியான மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 89 அமைப்பு ரீதியான மாவட்டங்களில் செயலாற்றி வரும் நிர்வாகிகளை அழைத்து, எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முடிவுகள் குறித்து அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவுகள் இயக்கத்தை தோற்றுவித்த எம்.ஜி.ஆர். மற்றும் வளர்த்த ஜெயலலிதா ஆகியோருக்கு நற்பெயர் தேடித்தரும் என்பதைக் கர...