இந்தியா, மே 1 -- பாரம்பரிய கேரள புளிசேரி செய்முறை: புளிசேரி என்பது கேரளாவின் ஒரு பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாகும். இதனை தயிர், மஞ்சள் தூள், காய்கறி மற்றும் மிதமான தேங்காய் விழுதின் கலவையால் சேர்த்து உருவாக்கப்படுகிறது. சாதத்திற்கு தமிழகத்தில் சாம்பார்போல், கேரளாவில் இது ஒரு சிறந்த கூட்டு உணவாகப் பரிமாறப்படுகிறது. இந்த கேரள புளிசேரி இனிப்பும் புளிப்பும் சேர்ந்த ஒரு நறுமண உணவு இது. வழக்கமாக கேரள சத்யா என்னும் பாரம்பரிய தலைவாழை உணவுப் பரிமாறலில், இடம் பெறும் புளிசேரி, தினசரி சாப்பாட்டுக்கும் ஏற்றது.

இதனை மலையாளிகள் தங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கு வழங்குவதை இயல்பாகக் கொண்டுள்ளனர். நம் தமிழ்நாட்டில் சாம்பார் போல், கேரளாவில் புளிசேரி பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: 'கம கம மணம் வீசும் வெந்தய பன்னீர் புலாவ் அரை மணிநேரத்தில் செய்வது எப...