இந்தியா, மார்ச் 31 -- மியான்மர் பூகம்பத்தின் கொடூரம் மீண்டும் ஒருமுறை பாபா வாங்காவின் 2025ஆம் ஆண்டுக்கான கணிப்பை நமக்கு நினைவூட்டுகிறது.

மார்ச் 28 வெள்ளிக்கிழமையன்று மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவானது. இதுபோன்ற சூழ்நிலையில், பல்கேரிய ஞானி பாபா வங்காவின் தீர்க்கதரிசனம் பலருக்கு நினைவுக்கு வருகிறது. 2025ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் என்ன? இயற்கை பேரழிவுகள் பற்றி அவர் என்ன சொன்னார்? என்பது குறித்து பார்ப்போம்

பால்கன் பகுதியின் நாஸ்ட்ரடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல்கேரியாவைச் சேர்ந்தவர். 12 வயதில், புயலில் சிக்கி பார்வையை இழந்தவர். மிக இளம் வயதில், அவர் பயங்கரமான கஷ்டங்களையும் எதிர்கொண்டார். அன்றிலிருந்து அவருக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் விசேஷ ...